புனிதம்..
தாய்க்கும், சேய்க்கும் உள்ள பிணைப்பைப்பற்றி எழுதுவதில்..
வைரமுத்துவின் கவிதைகள் நம்மை ஆச்சர்யத்தில் நிறுத்தும்..! " உன் நகம் கீற வீங்குதென்மார்பு" என்பதில் தொடங்கி
"மார்பில் ஊறும் உயிரே" என தாயின் உயிர்பருகும் மழலையின்அழகை அற்புதமாக எழுதியிருப்பார்..
"முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை செய்வேன் கண்ணே"
"இதழெச்சில் நீர் எனும் தீர்த்தத்தால் அதில் திருத்தங்கள் நீ செய்வாய் கண்ணே"
இது தாமரையின் தமிழ்.!
எந்த ஒன்றையும் புனிதபடுத்துவது அதன் இயல்பை கெடுக்கும் செயல்தான்..ஆனால் இயல்பான ஒன்று அழகாக நிகழும்பொழுது அது புனிதமாகிபோகிறது..!
தமிழுக்கு "ழ"கரம் எப்படியோ..
தாய்க்கு "சேயும்" அப்படியே..!!
Comments
Post a Comment