Posts

Showing posts from February, 2018

புனிதம்..

தாய்க்கும், சேய்க்கும் உள்ள பிணைப்பைப்பற்றி எழுதுவதில்.. வைரமுத்துவின் கவிதைகள் நம்மை ஆச்சர்யத்தில் நிறுத்தும்..! " உன் நகம் கீற வீங்குதென்மார்பு" என்பதில் தொடங்கி "மார்பில் ஊறும் உயிரே" என தாயின் உயிர்பருகும் மழலையின்அழகை அற்புதமாக எழுதியிருப்பார்.. "முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை செய்வேன் கண்ணே" "இதழெச்சில் நீர் எனும் தீர்த்தத்தால் அதில் திருத்தங்கள் நீ செய்வாய் கண்ணே" இது தாமரையின் தமிழ்.! எந்த ஒன்றையும் புனிதபடுத்துவது அதன் இயல்பை கெடுக்கும் செயல்தான்..ஆனால் இயல்பான ஒன்று அழகாக நிகழும்பொழுது அது புனிதமாகிபோகிறது..! தமிழுக்கு "ழ"கரம் எப்படியோ.. தாய்க்கு "சேயும்" அப்படியே..!!

புலம்பல்கள்

சில எழுத்துக்கள் உரைத்துவிடும் பல நூறு அர்த்தங்களை..!! ஓராயிரம் புறக்கணித்தல் இருந்தாலென்ன அதோ ஓர் மல்லிக்கை மொட்டு துளிர்க்கிறது..! விலக்குதல் ஒழுங்கீனம், விலகுதல் ஒழுக்கம்..! விழியற்றவளின் கையில் விலைமதிப்பற்ற ஓவியம்..! பிறந்த குழந்தையின் பாதங்களின் தூய்மை எவர் மனதில் காணக்கூடும்..? இசைத்தமிழை அறியாதவர்களுக்கு மழலையின் முனங்கல்கள் தேசியகீதம்..! உதாசினப்படுத்தியது போதும் ஒரு முறை கண்ணாடியை பார்த்துக்கொள்ளுங்கள்..!