Posts

Showing posts from 2018

தலைப்பு வைக்கல

தலைப்பு வைக்கல... . . . ஓய்வறியா பொழுதுகளில் என் தலையேந்தும் மடியைத்தான் தேடுகின்றேன்..வாழ்வின் துன்பங்களையெல்லாம் ஒருசேர திரட்டி என் தோலின்மீது வைத்துவிடு, பாலைவனத்தை கடப்பதொன்றும் காற்றிற்க்கு அத்தனை சிரமமில்லை..மலைமுகடுகளில் வழியும் பேரருவிகளுக்கு பாறையைத்தொடும் வரை தற்க்கொலை பயணம்தான்.. சிதறிக்கிடக்கும் சந்தோஷத்தை மட்டும் இருவரும் சேர்ந்தே பொருக்குவோம் வா!, செயற்க்கை இறகைப்பொருத்தி பறப்பதில் அத்தனை சுதந்திரம் இருக்கபோவதில்லை..அனுபவங்களில்  நீச்சில் பழகி வாழ்வின் பேராற்றங்கரையை அடைந்துவிடலாம்.. ஓசையில்லாமல் உன் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கும் இருதய துடிப்புகள் ஓய்வைத்தேடும்போது எனை மடியேந்திவிடு..! கண்கள் கசியாதே இதையும் பாழாய்போன காதலில் சேர்த்துவிடுவார்கள்..!!

புனிதம்..

தாய்க்கும், சேய்க்கும் உள்ள பிணைப்பைப்பற்றி எழுதுவதில்.. வைரமுத்துவின் கவிதைகள் நம்மை ஆச்சர்யத்தில் நிறுத்தும்..! " உன் நகம் கீற வீங்குதென்மார்பு" என்பதில் தொடங்கி "மார்பில் ஊறும் உயிரே" என தாயின் உயிர்பருகும் மழலையின்அழகை அற்புதமாக எழுதியிருப்பார்.. "முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை செய்வேன் கண்ணே" "இதழெச்சில் நீர் எனும் தீர்த்தத்தால் அதில் திருத்தங்கள் நீ செய்வாய் கண்ணே" இது தாமரையின் தமிழ்.! எந்த ஒன்றையும் புனிதபடுத்துவது அதன் இயல்பை கெடுக்கும் செயல்தான்..ஆனால் இயல்பான ஒன்று அழகாக நிகழும்பொழுது அது புனிதமாகிபோகிறது..! தமிழுக்கு "ழ"கரம் எப்படியோ.. தாய்க்கு "சேயும்" அப்படியே..!!

புலம்பல்கள்

சில எழுத்துக்கள் உரைத்துவிடும் பல நூறு அர்த்தங்களை..!! ஓராயிரம் புறக்கணித்தல் இருந்தாலென்ன அதோ ஓர் மல்லிக்கை மொட்டு துளிர்க்கிறது..! விலக்குதல் ஒழுங்கீனம், விலகுதல் ஒழுக்கம்..! விழியற்றவளின் கையில் விலைமதிப்பற்ற ஓவியம்..! பிறந்த குழந்தையின் பாதங்களின் தூய்மை எவர் மனதில் காணக்கூடும்..? இசைத்தமிழை அறியாதவர்களுக்கு மழலையின் முனங்கல்கள் தேசியகீதம்..! உதாசினப்படுத்தியது போதும் ஒரு முறை கண்ணாடியை பார்த்துக்கொள்ளுங்கள்..!