Posts

Showing posts from March, 2018

தலைப்பு வைக்கல

தலைப்பு வைக்கல... . . . ஓய்வறியா பொழுதுகளில் என் தலையேந்தும் மடியைத்தான் தேடுகின்றேன்..வாழ்வின் துன்பங்களையெல்லாம் ஒருசேர திரட்டி என் தோலின்மீது வைத்துவிடு, பாலைவனத்தை கடப்பதொன்றும் காற்றிற்க்கு அத்தனை சிரமமில்லை..மலைமுகடுகளில் வழியும் பேரருவிகளுக்கு பாறையைத்தொடும் வரை தற்க்கொலை பயணம்தான்.. சிதறிக்கிடக்கும் சந்தோஷத்தை மட்டும் இருவரும் சேர்ந்தே பொருக்குவோம் வா!, செயற்க்கை இறகைப்பொருத்தி பறப்பதில் அத்தனை சுதந்திரம் இருக்கபோவதில்லை..அனுபவங்களில்  நீச்சில் பழகி வாழ்வின் பேராற்றங்கரையை அடைந்துவிடலாம்.. ஓசையில்லாமல் உன் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கும் இருதய துடிப்புகள் ஓய்வைத்தேடும்போது எனை மடியேந்திவிடு..! கண்கள் கசியாதே இதையும் பாழாய்போன காதலில் சேர்த்துவிடுவார்கள்..!!